Tuesday, March 29, 2011

Nil Gavane Sellathey.. A review Vaz



Starts off promisingly and before you know it, you start feeling nostalgic.  The fact that you are watching " Texas Chainsaw Massacre" the 2003 version and (which itself is a remake of the 1974 Tobe Hooper's titular slasher flick) hits you.. A group of friends going on a vacation trip are being knocked off one by one.. who or what are the killers?   Technically the movie is sound with crisp editing by Mathan GunaDeva and J Lakshman handles the cinematography capturing the dry atmosphere well.  The cast comprising of the director Anand Chakravarthy, Dhansika and co.  pass muster as they have not much to do, except run around screaming.   Background score and mix are good by Selvaganesh, though none of the songs stick to your mind.  The flashback sequence is believable and is the best part of the film. Overall, an okay flick if you havent seen the original, but not for hardcore horror fans of hollywood.

(PS:  Should have listed Tobe Hooper in credits :)   )






Monday, March 21, 2011

முடிவு - ஒரு குறுங்கதை by Vaz


கி பி 3011.

அந்த 500 அடுக்கு மாடி கட்டிடத்தின் 345 எண் வீட்டில் உள்ள வரவேற்பறையில் அமர்திருந்தான் ரீவா, அருகில் அவன் தங்கை மகி....

எதிரே 100 அடி சதுர நீர்ம படிக ஒளிக்காட்சி திரையில் விளம்பரங்கள் ஓடி கொண்டிருந்தன .....

" வியாழன் கோளில் சுற்றுலாவிற்கான  கட்டணம் 30 % குறைப்பு ..."  " புதிய 100000  கிகா எண்பிட்டு கொள்ளடக்க தகடுகள் அறிமுகம் "

ஆனால் அதில் மனம் லயிக்காமல் யோசனையில் ஆழ்த்திருந்தான் ரீவா...

அருகில் மகி நிகழ் பட கருவியின் தொடு திரையில் எதையோ அழுத்தி கொண்டிருந்தாள்.

மின்னணு நாய்க்குட்டி பொம்மை ஒன்று அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தது.

"போகலாம் .. நான் தயார்" என்று குரல் கேட்டது ... ரீவா எழுந்து திரும்பி பார்க்க.

அவன் தந்தை மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் ...

"அப்பா " என்று தயங்கி பேசினான் ரீவா.

"ஊர்திக்கு சொல்லி விட்டாயா ரீவா ".... தந்தை வினவ

"ஆயிற்று .. இதோ வந்து விடும் "....

"அப்பா " என்று மகி எழுந்து அவரை கட்டி கொண்டாள்..

"சரி மகி நான் வருகிறேன் .. "  அவளை நெற்றியில் முத்தமிட்டு விலக்கினார் தந்தை..   அவள் கண்களில் நீர் கோர்த்து ..  "பார்த்து செல்லுங்கள் அப்பா" என்றாள். 

நாய்க்குட்டி தன் உலோக வாலை சுழற்றி "பௌ" என்றது ...

தந்தை அதை பார்த்து கை அசைத்தார் .. "வருகிறேன் நீரோ "

வெளியே குழல் ஊது சப்தம் ஒலிக்க..

ரீவா "ஊர்தி வந்து விட்டது அப்பா "  என்றான்.

தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் கதவுகள் பிளந்து கொள்ள ..

முட்டை வடிவ பறக்கும் ஊர்தி நின்று கொண்டிருந்தது .. ஓட்டுனர் உள்ளே ஒரு விசையை இழுக்க.. கதவுகள் திறந்து பறவை போல் விரிந்து நின்றது.

தந்தை திரும்பி வீட்டை சுற்றில் ஒரு முறை பார்த்து விட்டு .. வாகனத்திற்குள் ஏறி அமர்ந்தாள் ..... கூடவே ரீவாவும் அமர்ந்தான் ...

"எங்கு செல்ல வேண்டும் " வினவினான் ஓட்டுனர்.

"அரசாங்க கட்டிட எண் 887 " என்று ரீவா பதில் அளித்தான்.

ஓட்டுனர் தொடு திரையில் எண்களை பதிக்க ... கதவுகள் மூடி கொண்டு ... குளிர் சாதனம் இயங்கதொடங்கியது....   கண்ணாடி கதவில் மகி மற்றும் நீரோ நின்றது தெரிய..  கை அசைத்தார் தந்தை.. கை மற்றும் வால் பதிலுக்கு அசைவது தெரிந்தது ...மெல்லிய உறுமலுடன் அந்த காற்றழுத்த வாகனம்  வட்டம் அடித்து கிளம்பியது..

விண்ணை முட்டும் கட்டிடங்கள் ஊடொளி பிம்பங்களின் ஒளியில் பிரம்மாண்டமாக நின்றன.. முழுமைப் படிம உருவங்கள் விளம்பரங்கள் மற்றும் அரசாங்க விதிகளை பறைசாற்றிகொண்டிருந்தன.  பல வடிவுகளில் மற்றும் பறக்கும் அளவுகளில் வாகனங்கள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. ஓட்டுனர் அதற்கிடையில் லாவகமாக வளைத்து ஓட்டினான்.

"ரீவா"

"என்ன அப்பா "

"மகியை நன்றாக பார்த்துகொள்.  அவள் விரும்பும் படிப்பு எந்த கோளில் இருந்தாலும் சேர்த்து விடு.  நீயும் இந்த வேலை விட்டு வேறு கோள்களில் ஏதும் கிடைகிறதா என்று பார்"

"நல்லது "

"அரசாங்க திருமண பதிவில் உன் எண் முதல் 100குள் வந்து விட்டது..  கூடிய விரைவில் அழைப்பு வரும். உனக்கு ஒதுக்கப்படும் பெண்ணை திருமணம் செய்து கொள் "

"சரி .. செய்து கொள்கிறேன்"

" நீரோ விற்கு தினமும்  மின்னூட்டம்  ஏற்ற வேண்டும். மறந்து விடாதே "

"கண்டிப்பாக " என்றான் ரீவா .

லேசான குலுங்கலுடன் ஊர்தி அந்த கருப்பு நிற கட்டிடத்தின் முன் நின்று .. அதன்  அகன்ற வாயிலில் தன் கதவுகளை பொருத்தி கொண்டது ..அதன் முகப்பில் ஒளிரிய பிம்பங்களால் அரசாங்க கட்டிட எண் 887 என பிரும்மாண்டமாக மின்னியது. 

"வந்து விட்டது " என்றான் ஓட்டுனர்.

ரீவா தன் அடையாள மின்னட்டையை அவன் நீட்டிய கருவியில் தேய்த்து பயணத்திற்கு பணம் செலுத்தினான். கதவுகள் பிளக்க, பின் இருவரும்  இறங்கி அந்த கட்டிட வாயிலை நோக்கி நடந்தனர்.   மிக பெரிய கதவு அவர்களை எதிர்கொண்டது. அதன் முன் இரு சிப்பந்திகள் அரசாங்க உடையான வெளிர் பச்சை சீருடை அணிந்து நின்றனர்.  இருவரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு .. இருவரின் உடல்களில் அகச்சிவப்பு கருவியால் சோதனை நடத்தினர்.  பின் ஒரு விசையை இழுத்தவுடன் அந்த கதவு திறந்துகொண்டது.  "போகலாம் " என்றான் ஒருவன்.

உள்ளே ... நீண்ட வெண் கற்களால் பதித்த நடைபாதை .. அதன் முடிவில் ஒரு அகலமான மேஜை .. அதன் மேல் ஒரு கணினி மற்றும் அருகில் ஒரு கன்னி..

இருவரும் அதை நோக்கி நடந்தனர். 

அந்த பெண் எழுந்து நிற்க,  கழுத்தில் வெண் தங்க மாலை மின்னியது

" வலிக்குமோ "  பொதுவாக கேட்டார் தந்தை.

ரீவா பதில் சொல்லவில்லை.

அந்த பெண்ணை நெருங்கியவுடன்.  அவள் எழுந்து இயந்திரத்தனமாக ...

"உங்கள் சமுக பிணைய எண் ?" என்றாள்..

"889899768504 -௪௫௬" என்று கூற ....

கணினி தொடு திரையில் வேகமாக அதை பதிவு செய்தாள்.

"உங்கள் பிறந்த நாள் "

" 11-12-2061"

"சரி" என்று அந்த பெண் தன் காதில் பொருத்தியிருந்த அலைபேசியில் எதோ பேசிவிட்டு ..

"அறை எண் 4589 " என்றாள் அதே இயந்திர தன்மை மாறாமல். ..

" தளம் 45"

இருவரும் அங்கிருந்த தானியங்கி உயர்த்தியை நோக்கி சென்று ...உள்ளே ஏறி 4589 ஐ அழுத்தினர் ... மின்னல் வேக உயர்த்தி ஆனதால் சில நொடிகளில் அவர்களை 45 எண் தளத்தில் இறக்கியது ...

வெண்ணிற சுவர்கள் இருபுறமும் உயர்ந்து நிற்க ...இடுப்பு உயர இயந்திர சிப்பந்திகள் அங்கும் இங்கும் சுற்றிகொண்டிருந்தன .... அவற்றில் ஒன்றை நிறுத்தி "4589 அறை " என்று கேட்டான் ரீவா.   தன் இரும்பு கரத்தால் ஒரு அறையை நோக்கி காட்டியது அந்த சதுர வடிவ இயந்திர சிப்பந்தி.

தந்தையும் ரீவாவும் அந்த அறையை அடைந்தனர்.  தானியங்கி கதவுகள் திறந்து கொள்ள. .. உள்ளே ..

இரு வெள்ளை உடை அணிந்த மனிதர்கள் அவர்களை "வாருங்கள் " என கூறினார்.

"இவர்தான் பிரஜையா?"

"ஆமாம் "  என்றார் தந்தை.

"முன்னே வாருங்கள் " என சொல்லி அவரை அழைத்து சென்று ஒரு சிறிய மேடை மீது ஏற்றி. .. ஒரு அகச்சிவப்பு கோலினால் உடலை அளந்தனர்.

"மருத்துவ பரிசோதனை யாவும் முடிந்து விட்டதல்லவா "

"நேற்றே முடிந்து . .. அரசாங்க தகவல் தளத்தில் ஏற்றப்பட்டுவிட்டன " என்றார் தந்தை.

"நல்லது.. அப்பொழுது நாம் செல்ல வேண்டியதுதான் பாக்கி " என்றான் அவன் ...

"சரி ஒரு நிமிடம் " என்று ரீவா நோக்கி வந்த தந்தை..

அவனை ஒரு நிமிடம் கட்டி பிடித்து விட்டு .. "வருகிறேன் ரீவா.. "

"சரி அப்பா... " என்ற ரீவா வின் கண்களில் நீர் தளும்பியது .

கூட வந்த இரு நபர்களும் தந்தையின் கையை பிடித்து அழைத்து சென்றனர்..   ..சில படிகளில் ஏற, மற்றொரு மூடப்பட்ட அறை இருந்தது அறை இருந்தது.. உள்ளே சென்று மூவரும் மறைந்தனர்.. தந்தை திரும்பி கை அசைத்தார் .. கதவுகள் மூடி கொள்ள.......

ரீவா அருகில் இருந்த மெத்திருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.

பல நிமிடங்கள் உருண்ட பின்பு..

அந்த அறை கதவுகள் திறந்து கொள்ள..

ரீவா எழுந்து நின்றான்.

அந்த இரு நபர்களும் ரீவாவை நோக்கி வந்தனர்.   ஒருவன் கையில் கருநீல நிறத்தில் பளிங்கினால் ஆன சதுர வடிவ சிறிய பெட்டி இருந்தது .... அதில் தந்தை முகம் பொறிக்கப்பட்டு கீழே 889899768504 -௪௫௬ எண் பொறிக்கப்பட்டு  இருந்தது.

"இந்தாருங்கள், கீழே வரவேற்பில் கையொப்பம் பதித்து விட்டு செல்லுங்கள் " என்ற சிப்பந்தி அதை ரீவாவிடம் நீட்டினான்..

"சரி " என்ற ரீவா அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி கொண்டான்.

உயர்த்தியில் கீழே இறங்கி கையை தொடு திரையில் பதித்து விட்டு மெதுவாக திரும்பி நடந்த ரீவாவின் கண்கள் கட்டிடத்தின் உச்சியில் ஒளிரியம்  ஒளியில் ஓடிகொண்டிருந்த அந்த எழுத்துக்களை தன்னிச்சையாக வாசித்தன...

" 2095 உயிர் நீட்பு சட்டம் :  அரசாங்க பிரஜைகள் 50 வயதுக்கு மேல் நீடிக்க அனுமதி இல்லை. .. உயிர் வாழும் தகுதி இழக்க பெறுவர்"

தந்தையின் சாம்பலுடன் இயந்திர வாழ்க்கையை நோக்கி திரும்பினான் ரீவா.

=========================== முடிவு? +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Glossary

முழுமைப் படிம          Hologram
நிகழ் பட              video
நீர்ம படிக ஒளிக்காட்சி      LCD
ஊடொளி              laser
மின்னூட்டம்         charge   
ஒளிரியம்            neon
அகச்சிவப்பு             infrared
சமுக பிணைய         social network
உயர்த்தி            elevator/lift
வெண் தங்கம்         platinum
தகவல் தளம்         database
மெத்திருக்கை        sofa
கொள்ளடக்க தகடுகள்         memory disks
எண்பிட்டு            byte
==========================================================

Friday, March 11, 2011

Paranormal Activity 2 - A Review



Basically a rehash of the first part, but unlike its predecessor we have a whole family including an infant and a dog, getting center of attention of spirits after moving into a new house. This time though, the story is told through numerous security cameras installed around the house and also a handheld cam for closeup shots. Fans of part one may know wat to expect, but this can pass also as a standalone watch. People expecting a regular horror/gore ingredients can give it a miss, since this one is sans background music, solely relying upon natural sounds for scare effects. Definitely is spooky, if watched alone at night. Give it a go!

Vaz

Wednesday, March 9, 2011

Mutual Funds, the way to wealth


 
Mutual funds are investment instruments wherein funds from individuals are collected by companies, pooled, and are invested in various stocks and debt options, managed by professionals who are known as Fund Managers.  Let us shed some light on few points about why mutual funds are key to one’s investment portfolio in today’s world.

Professional Management
Unless one has a keen eye on a company’s details and the share market, he is tend to lose his hard-earned money by investing in equities (shares of companies listed in share market).   Now by investing in mutual funds, we leave that worry to a professional fund manager who studies the market and can buy or sell stocks as and when need arises.   He has real time access to market information and can churn the portfolio according to the negatives and positives of the market.           

Diversification  
A Mutual fund has numerous stocks in its portfolio diversified across various sectors, so the market fluctuations across sectors are well handled.  Mutual fund unit-holders can benefit from diversification techniques usually available only to investors wealthy enough to buy significant positions in a wide variety of securities.   

Ease of Use/Liquidity
Mutual funds can be bought online from the AMCs (Asset Management Companies) or from a third party online vendors like Fundsindia, Sharekhan etc.  You would need a PAN card and an online transfer enabled bank account for online purchases.  Offline, they can be bought through various agents after completing minimal paperwork.   These funds can be redeemed any time with a click of a mouse and the redeemed amount will be credited in your account with 3 days.  Some funds like ELSS (equity linked saving schemes) have 3-year lockins to inculcate investment discipline.   Money can be invested lumpsum or the SIP route, while the latter is the thing to do for long term wealth creation.

SIP
Another great mode to invest in MF schemes is the systematic investment plan or SIP which is the darling of the investors.  This is simply setting aside a predetermined sum for a specific time period, say 1000 rupees for a period of 36 months.   This can be done through ECS (electronic cash transfer) facility available through banks.  The beauty of SIP is that when the market is on the rise, the NAV (net asset value) of the scheme is high, so the investor gets less units and when the market is low, the NAV is low, and investor gets more units.  So over a longer period of time, we tend to average out the fluctuations of the market and acquire profits.  This is called as rupee -cost- averaging.   SIP can work wonders over longer term and some funds have given staggering 75% returns!

Variety
Variety is no dearth when it comes to MFs, as we have lot of funds like aggressive funds, balanced funds, large cap, multi cap, sectoral funds, gold funds etc. tailor made to suit each investors’ risk appetite and goal.  There are debt funds in which money is invested in government securities, money market instruments etc., which are risk free but give low albeit stable returns.

Tax Benefits
Mutual funds invested in ELSS schemes are entitled for tax rebate under 80c section of IT and are subject to a lock-in of 3 years.   This option gives twin benefits since the money is locked in and can reap profits in the longer run while giving tax benefits simultaneously.

Safety
All mutual fund houses or AMC’s are governed by SEBI and are relatively safe instruments, (doesn’t apply to Sensex fluctuations!).  Every transaction made by customer is tracked online and he gets periodic updates via statements on his invested amount.   Most AMCs like HDFC, DSP Black Rock, UTI etc. which offer Mutual funds are pedigreed fund houses with long term track records for managing money.

Mutual funds are the only instruments which can beat inflation which is rising alarmingly at 6% to 8% per annum.  When you factor inflation in fixed deposits or PPF schemes, the return you get is nullified.  So investing in equities through SIP mode in mutual funds is the only investment which can beat inflation.  Though they are subject to market risks, they are historically known to beat market fluctuations.  End of the day, MFs are the essential tools for long term wealth creation and should be a large part of anyone’s investment portfolio. 

 Vaz - 03/10/2011

Tuesday, March 8, 2011

"Happy Anniversary ..... "

அடுப்பிலிருந்த cooker "வீல் " என விசில் அடித்து கூப்பிட, வெங்காயம் நறுக்கி கொண்டிருந்த ஆஷா அவசரமாக நெருப்பை குறைத்து சிம்மில் வைத்தாள்.  அன்று அஜ்மல்லுக்கும் ஆஷாவிற்கும் முதலாவது திருமண நாள்.   அஜ்மல் வெளிய டின்னெர் செல்லலாம் என்று சொல்லியும், ஆஷா பிடிவாதமாக நான்தான் சமைப்பேன் என்று அடம் பிடித்து நிற்க, ஏதோ செய் என அவனும் ஆபீஸ் சென்றுவிட்டான்.

அபார்ட்மென்ட் முழுக்க non veg சமையல் வாசம், சில்லி சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் ப்ரை என அஜ்மலுக்கு பிடித்த உணவு வகைகள் உணவு மேஜையில் நிறைந்தன.   கடைசியாக ராயதாவிற்கு வெங்காயத்துடன் தயிரை கலந்து வைத்த ஆஷா, "ஹப்பாடா" என மின்விசிறி காற்றில் சிறிது ஓய்வெடுத்தாள்.

"இன்னைக்கு candle light  செட் பண்ணி அவரை அசத்திடனும்" என்று வரவேற்பறையால் இருந்த மேஜையை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

"என்ன இன்னைக்கு 6 மணிக்கே வர சொன்னேன்.  இன்னைக்காவது நேரத்தில வர்றார இந்த மனுஷன்" என்று அலுத்துக்கொண்டு சுவர்கடிகாரத்தை பார்த்தாள்.

மணி இரவு 7:30.
========================================


பைக்கில் Apartment நோக்கி விரைந்து கொண்டிருந்தான் அஜ்மல்.  கிளம்பும்போது பார்த்து "அஜ்மல். இந்த ஒரு லெட்டர் மட்டும் டிராப்ட் பண்ணிடுங்க .. இன்னைக்கு ஹெட் ஆபீஸ் அனுப்பனும் " என்று சொன்ன மேனேஜர்-ஐ  மானசிகமாக சாபமிட்டுகொண்டு அச்செலேரடோரை திருகினான் அஜ்மல். 

அவன் சட்டை பாக்கெட்டில் ஆஷா-விற்காக ஆசையாக வாங்கிய வைர மோதிரம் ஒரு சிறிய gift box உள்ளே உறங்கிகொண்டிருந்தது.  மூன்று மாதங்களுக்கான incentive சேர்த்து வைத்து வாங்கி இருந்தான்.   திருமணமான பிறகு அவளுக்கு பெரிதாக எதுவும் வாங்கி கொடுத்தது இல்லை என அவனுக்குள் ஒரு உறுத்தல் இருந்து வந்தது.  இன்று சரி ஆகி விடும், "ஆஷா darling .. இதோ வருகிறேன் .. இதை பார்த்ததும் உன் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை நான் பார்க்க வேண்டும்" என நினைத்தபடி ஒரு பேருந்தை லாவகமாக கட் அடித்து கடந்தான்.

அவன் கைகடிகாரத்தில் நேரம் 8:00.

=========================================

ஆஷா புதிய புடவையை அணிந்து wardrobe கண்ணாடி முன்னால் நின்று மேக் அப் செய்து கொன்டிருந்தாள்.  அஜ்மலுக்கு பிடித்த கருப்பு நிற சாரி.  மற்றும் அவனுக்கு வாங்கிய புதிய titan watch  பரிசு பளபளப்பான பரிசு பெட்டியுனுள் காத்திருந்தது.

"என்ன இன்னும் காணோம்.. போன் பண்ணி பாக்கலாமா " என யோசித்து செல்போன் எங்கே என்று அவள் கண்கள் அலைபாய்ந்தது.  "சரி வேண்டாம், ட்ரிவிங்கில் இருப்பார்.. " என மனதை தேற்றிக்கொண்டு டிவி முன் அமர்ந்து சேனல்களை மற்ற ஆரம்பித்தாள்.  ஆனால் மனம் அதில் போகவில்லை.

உடனே எழுந்து டைனிங் டேபிளில் மெழுகுவர்த்திகளை ரெடியாக எடுத்து பொருத்துவதற்கு எதுவாக வைத்தாள்...  அப்போது வாசல் மணி சிணுங்கியது. " டிங் டிங் "...

மணி 815.

=============================================

ஓடி சென்று கதவை திறந்த ஆஷா .....

அஜ்மல் நின்றுகொண்டிருந்தான் ...  சின்ன புன்னகையுடன் ...

"என்னங்க இன்னைக்காவது நேரத்திலே வரலாமில்ல"  என்று சிரித்த ஆஷா... "சரி வாங்க "  என திரும்பி நடக்க ...

உள்ளே வந்த அஜ்மல் ...

அங்கேயே நின்று அவளை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான் ...

பின் தொடர்ந்து அஜ்மல் வராததால் .. திரும்பிய ஆஷா .. "என்னங்க .. சீக்கிரம் வந்து பிரெஷ் ஆகுங்க.. சாப்பாடு ஆறி போய்டும் .. " என சொல்ல..

அஜ்மல் மெதுவாக அவள் அருகில் வர...

"என்னங்க ... உடம்பு சரி இல்லையா என்ன.."  என்று வாஞ்சையுடன் அவனை நெருங்கினாள்..

"ஹேப்பி அன்னிவேர்சரி .. மை டியர் ஆஷா " என்று அஜ்மல் நீட்டிய கையில் .. ஒரு gift box ஜிகினா அப்பிய காகிதத்தில் மின்னியது.

அப்போது "என் இனிய பொன் நிலவே" யின் கிதார் நாதம் செல்போனின் ரிங்க்டோன் ஆக சிணுங்கியது ..

"இது வேற.. ஒரு நிமிஷம் டியர்"  என போன் எங்கே என தேடிய ஆஷாவின் கண்கள். . சமையல் அறையிலுள் இருக்கிறது என உறைக்க.. ஓடி சென்று தேடி... ப்ரிஜ் மீது இருந்த போனை தேடி பிடித்து எடுத்தாள்.

தெரியாத ஒரு நம்பர் டிஸ்ப்ளே வில் மிளிர.. காதில் பொருத்தி "ஹலோ " என்றாள்..

கனமான ஒரு குரல் "மேடம்.. .. நாங்க ஹைவே போலீஸ் பேசுறோம்.  இங்க ஒரு விபத்து நடந்து இருக்கு.   ஸ்பாட்ல கிடந்த செல்போன்-ல உங்க நம்பர் wife ஸ்டோர் ஆகி இருந்தது. பைக் ல வந்த நபர் ஒருவர் லாரில அடிச்சு அங்கயே.. ...  மேடம் மேடம் ........"

ஆஷாவிற்கு தலை சுற்ற, கையில் இருந்த போன் நழுவி விழுந்தது..  அவள் ஓடி கிச்சனை விட்டு வெளிய வந்து பார்க்க .....

அங்கே ஹாலில் ....

யாரும் இல்லை.

மேஜை மேல் கவர் பிரிக்கப்பட்ட பெட்டியில் ஓர் வைர மோதிரம் மட்டும் அவளை பார்த்து சிரித்தது

மணி 845 .....................

END


பேச்சி - ஒரு குறுங்கதை

பேச்சி - ஒரு குறுங்கதை
----------------------------------------------------------------


கோவையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீறி கொண்டிருந்தது அந்த செவ்ரோலேட் கார்.  இரவு மணி 1230 என்பதால் இருள் அப்பி இருந்தது.  காரின் Headlight  வெளிச்சம் இருட்டை கிழிக்க போரடிகொண்டிருந்தது.   காருக்குள்ளே சூர்யா உதட்டோரத்தில்  சிகரட் தொங்க ஸ்டீரிங்கை ஒரு கையால் அலட்சியமாக சுழற்றி கொண்டிருந்தான்.  அருகில் அருண் சிறிது யோசனையாக அமர்திருந்தான்.   ஸ்டீரியோவில் ஜானகி "ஊரு சனம் தூங்கியதாக" ஹஸ்கியாக பாடிகொண்டிருந்தார்.   இருவரும் அருணின்  Farmhouse ல் இருந்து weekend  கொண்டாட்டத்திற்கு பிறகு திரும்பி கொண்டிருந்தனர்.

"டேய் சூர்யா. Farmhouse  ல இருந்து காலைல வந்திருக்கலாம்ட.. இப்போ பாரு அம்மாவாசை ராத்திரி.. " என்றன் அருண்.

"போடா, நாளைக்கு காலைல ஷிப்ட்கு போகாட்டி அந்த TL நாய் மாறி கத்துவான்.. ஏன்டா உனக்கு என்ன பயமா இருக்கா?" என்று ரோட்டில் இருந்த பார்வை எடுக்காமல் பேசினான் சூர்யா.

"இல்லடா, இப்போ நம்ம தாண்ட போற ஊருல ஒரு urban legend இருக்குடா... யாரும் நைட் வெளியே வரமாட்டாங்க அதுவும் இன்னைக்கு .. அதான் அம்மாவாசை அன்னைக்கு..." சற்று தயங்கித்தான் பேசினான் அருண்.

"என்னடா .. கதை சொல்ற.. விளக்கமா சொல்லு "

"இல்லை சூர்யா.. இந்த ஊருல பல வருடங்களுக்கு முன்னாடி ஓர்ு ஏழை பொண்ணு ..பேரு பேச்சி ..அவ ஜமிந்தார் வீட்டு பையன காதல் பண்ணிருக்கா.  அவனும்தான். ஆனா அவங்க குடும்பத்துல இது தெரிஞ்சவிடனே அந்த பொண்ண ஊருக்கு முன்னாடி கல்லால அடிச்சு கொன்னுட்டங்கடா.  அதுக்கப்புறம் அவ ஆத்மா அம்மாவாசை அன்னைக்கு உலவுதுன்னும் .. அப்ப அவ கண்ணுல படர ஆண்கள் கல்லா சமஞ்சு போயடுவங்கன்னும் ஒரு நம்பிக்கை.  அதனால யாரும் வெளிய வர மாட்டங்க பா." சொல்லி முடித்தான் அருண்.

" ஹஹஅஹா so funny man . ஏன்டா Clash of the Titans பாத்துட்டு Medusa கதைய எடுத்து பேச்சி கல்லு அது இதுன்னு புருட விடற... அப்படி இருந்த இந்த ஊர்ல வீடு கட்ட கல்லுக்கு பஞ்சமே இல்லடா ... "  சிரிதிதபடி புகையை ஊதினான் சூர்யா.

" இல்லடா  மச்சி , இது சின்ன வயசுல இருந்த நான் கேட்ட கதை.. நாங்க Farmhouse போன கூட அன்னைக்கு சீக்கிரம் திரும்பிடுவோம்; அதுவும் அம்மாவசைனா சான்ஸ் எ  இல்லடா "

" போடா.. அப்டி பேச்சி வந்த பார்த்துட்டே போலாம்.. கூட ஒரு போடோ எடுக்கணும் ..செல்போன்ல கேமரா இருக்குல்ல"  ஏளனமாக சொன்னான் சூர்யா.

அப்போது கார் பொன்னேட்டில் இருந்து எதோ சப்தம் வந்தது....

அடுத்து .......

"என்னடா ஆச்சு " பதைபதைப்புடன் கேட்டான் அருண்.

" தெரியலடா.. last week தான் சர்வீஸ் போயிட்டு வந்தது.. இரு நிறுத்தி பாக்கிறேன்" இது சூர்யா..

காருக்குள் இருந்த சப்தம் " கடக் கடக் " என அதிகமாக கேட்க..

"டே வேண்டாண்டா.. கார இங்க நிறுத்தாதே.. ப்ளீஸ்.."  கெஞ்சும் தொனியில் அருண் சொல்ல

" போடா . .. அப்படியே  ஓட்டுனா எதாவது பிரச்சனை ஆயுடும்" என்ற சூர்யா ... காரை ஸ்லோ செய்து ரோட்டோரமாக நிறுத்தினான்..

"ஐயோ.. டேய் சீக்கிரம் பாரு .. நினைச்சேன் கிளம்பம்போதே ஏதாவது  ஆகும்னு... சீக்கிரம் பாருடா"

"இருடா புலம்பாம.. ஒக்க நிமிஷம் "  என்று இறங்கிய  சூர்யா, சிகரெட்டை விசிறி விட்டு,  கார் முன் சென்று Bonnet திறக்க,  அது பிளந்து நிற்க,, உள்ளே குனிந்து பார்க்க முற்பட்டான் டார்ச் ஒளியில் . ..

அருண் இருப்பு கொள்ளாமல் நெளிந்து .. பயத்துடன்  சுற்றும் முற்றும் பார்க்க... இருள் எங்கும் வியாபித்திருந்தது.. கண்களைக் கசக்கி பார்த்ததில் தூரத்தில் வயல்வெளிகள் .. நடுவில் ஒரு சின்ன மின்விளக்கு தெரிய... பூச்சிகளின் ரீங்காரம் கேட்டது.. கார் ஸ்டீரியோவில் இப்பொது "வெட்ட வெளி பொட்டலிலே " என்று கானம் ஒலிக்க.."ஐயோ இது வேற " டக்கென்று ஆப் செய்தான் அருண்.  நிசப்தம்.

"பேட்டேரி வயர் லூஸ் ஆய்டுச்சு போலடா.. டைட் பண்ணிட்டேன்...: ரெடி போலாம் " என்று போனெட் மூடினான் சூர்யா.

"சரி... சரி வாடா போலாம் ... பாஸ்ட்"  பரிதவிப்புடன் அருண் சொல்ல..

" ஹஹா ..ஏன்டா உன் பேச்சிக்கு ஒரு ஹாய் சொல்லலாம்னு பார்த்தா முடியாது போல "  என்றவாறு ஏறி அமர்ந்தான் சூர்யா.

சாவியை திருக, மென்மையான உறுமலுடன் என்ஜின் பற்றிக்கொண்டது..ஹை பீம் சுவிட்சை தட்டினான் சூர்யா...

இருட்டை கிழித்து பாய்ந்த halogen ஒளியில்........

அரூபமாக புகை போன்று ஒரு உருவம் தெரிய...

"ஹே வாட் இஸ் தட்? " என்று கூர்ந்து நோக்க முயன்றான் சூர்யன்...fa

அருண் திகில் உடன் "வேண்டாம் பார்க்காத" என அலற..

நெருப்பு பிழம்புகள் போல இரு கண்கள் இருட்டில் இருந்து தென்பட .....

ஆஆஆஆஆஆஆஆஆஅ .............

மறுநாள் தினத்தந்தி பக்கம் 8
"கோவை பாலக்காடு நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றுகொண்டிருந்த காருக்குள் இரு கற்சிலைகள் இருந்தன.  போலீசார் இது சிற்பம் கடத்தும் கும்பல் கைவரிசையோ என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  மேலும.......

+++++++++++++++++++++++++++++++++END+++++++++++++++++++++++++++++++++++